பல்லடம் கிளைச்சிறை முன்பு காரை பார்க்கிங் செய்ய முயன்ற போது பாதாள சாக்கடையில் இறங்கியதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளைச்சிறை முன்பு மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை முன்பு காரை பார்க்கிங் செய்ய முயன்றபோது, பாதாள சாக்கடையில் இறங்கியதால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: தேனீர் அருந்துவதற்காக பல்லடம் கிளைச் சிறை முன்பு நபர் ஒருவர் காரை நிறுத்த முயன்ற போது மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழுவில் இறங்கி கார் விபத்துக்குள்ளானது. அவற்றை ரெக்கவரி வேன் மூலம் குழியில் இருந்து மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நீதிமன்றம், கிளைச் சிறை, பழைய காவல் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம் என அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள மங்கலம் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில் பல்லடம் கிளைச்சிறை முன்பு பாதாள சாக்கடை பழுதாகி ஒரு வருடம் ஆகியும் மூடப்படாமல் உள்ளது.

கிளைச்சிறை, நீதிமன்றம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருவோர் பல்லடம் கிளைச் சிறை முன்பு தங்களது வாகனங்களை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் கிளைச்சிறை முன்பு மூடப்படாத பாதாள சாக்கடையால் கடந்த எட்டு மாதங்களில் பல்வேறு வாகனங்கள் பாதாள சாக்கடை குழியில் இறங்கி விபத்துக்குள்ளாகி வருவது தொடர் கதையாகி வருகிறது.



இன்று மங்கலம் சாலையில் படியூர் நோக்கி தனது காரில் வந்த சத்தியமூர்த்தி என்பவர் தேனீர் அருந்துவதற்காக பல்லடம் கிளைச் சிறை முன்பு தனது காரை நிறுத்த முயன்ற போது மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழுவில் இறங்கி கார் விபத்துக்குள்ளானது.



ரெக்கவரி வேன் மூலம் காரை குழியில் இருந்து மீட்டுள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மங்கலம் சாலையில் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க மூடப்படாமல் உள்ள பாதாள சாக்கடையை உடனடியாக மூட பல்லடம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...