வால்பாறை வழியாக கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

மழை காரணமாக அம்பலப்பாறை என்ற இடத்தில் சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை உடைந்து சேதம் அடைந்துள்ளதால், அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.


கோவை: சாலையை சரி செய்யும் வரை வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் செல்ல வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி உள்ளது. இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும், மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதில் வால்பாறையில் இருந்து 80 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகள் பார்க்க செல்லுகின்றனர்.



இந்நிலையில் நேற்று அதிரப்பள்ளி வன பகுதியில் பெய்த கனமழையால் அம்பலப்பாறை என்ற இடத்தில் சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை உடைந்து சேதம் அடைந்தது.

இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை சரி செய்யும் வரை வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று திருச்சூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...