தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வேண்டும் - HMS கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மஸ்தூர் சபா(HMS) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களில் வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் தீபாவளி போனஸ் 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று இந்து மஸ்தூர் சபா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மஸ்தூர் சபா(HMS) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், "கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களில் வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் தீபாவளி போனஸ் 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், பதிவு செய்து புதுப்பிக்கப்படாத தொழிலாளர்களுக்கும் புதிதாக சேரக்கூடிய தொழிலாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாரியத்தின் பயன்கள் அடைந்திடவும், வயதான காலத்தில் சமூக பாதுகாப்பு கிடைத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், வீடு கட்ட மானியம் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும், அனைத்து நல வாரியங்களும் ஒரே மாதிரியான இணையதள நடைமுறையை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



இந்த கவன எதிர்பார்ப்பாட்டத்தில் HMS மாநில செயலாளர் இராஜாமணி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...