மாற்றுத்திறனாளி குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா போராட்டம்

தனக்கு சேர வேண்டிய நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


கோவை: தனக்கு வர வேண்டிய நிலத்தை உறவினர்கள் தனக்கு தெரியாமல் விற்று விட்டதாகவும், அந்த பங்கை கேட்டு எட்டு வருடங்கள் போராடி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அவர்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே உள்ள காந்திபுரம் 1-வது வீதியை சேர்ந்த தவுலத் என்ற பெண் அவரது மாற்றுத்திறனாளி மகள் மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.



அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அப்பெண்ணையும் குழந்தையையும் அகற்ற முயன்றனர். ஆனால் அவர் வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு சூழல் உருவானது.



பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு அழைத்து சென்றனர். இது குறித்து தவுலத் கூறுகையில் தங்களுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 8 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் உள்ளதாகவும், அந்த இடத்தை தனக்குத் தெரியாமல் தனது உறவினர்கள் சிலர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த திமுக பிரமுகருக்கு விற்று விட்டனர் எனவும், அந்த இடத்தில் எனக்கு பங்கு வர வேண்டும் என்ற நிலையில் எனக்கு எந்தவித பங்கும் தரவில்லை என தெரிவித்தார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்த அவர் சுமார் 8 ஆண்டுகளாக இது தொடர்பாக போராடி வருவதாக தெரிவித்தார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வர வேண்டிய பங்கை மீட்டு தர வேண்டும் என்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டு தர்ணா செய்த பெண்ணால் பரபரப்பு நிலவியது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...