உடுமலை அருகே சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு

உடுமலை அருகே கூலி தொழிலாளர்கள் பேருந்துக்காக சாவடி அருகே காத்து இருந்த போது மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர்: உடுமலைப்பகுதிகளில் நேற்றிரவு முதல் செய்த தொடர் மழையால் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் கொழுமம் ஊராட்சி பகுதியில் உள்ள சாவடி எனப்படும் தங்கும் விடுதி உள்ளது. இந்தப் பகுதியில் கூலித் தொழிலாளர்கள் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக சாவடி அருகே பழனி செல்லும் பேருந்துக்காக காத்து இருந்தனர்.



அப்போது எதிர்பாராத விதமாக சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளர்கள் மணிகண்டன் (28), கௌதம்(29), முரளி ராஜன்(35) ஆகியோர் படுகாயம் அடைந்து உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடுமலை அரசு மருத்துவமனையில் மூவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.



நேற்று நள்ளிரவு முதல் இப்பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்து இருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடுமலை அருகே கூலி தொழிலாளர்கள் பேருந்துக்காக சாவடி அருகே காத்து இருந்த போது மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...