தாராபுரம் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஆய்வு கூட்டம் - ஊராட்சிகளின் வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசனை

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கான ஆய்வு கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள், குடிநீர் பிரச்சினை, தார் சாலை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


திருப்பூர்: கிராம ஊராட்சி பகுதியில் மிகவும் பழுது அடைந்த சாலைகளை புதுப்பிப்பது, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கான ஆய்வு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் த.பானுப்பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) என். சிவகுருநாதன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் இ.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள், குடிநீர் பிரச்சினை, தார் சாலை அமைப்பது குறித்தும் மற்றும் 16 கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.



அப்போது ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில் குமார் கூறும்போது, இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை கை கொடுக்கவில்லை. இதனால் கிராமப்புற பகுதியில் பல இடங்களில் குடிநீர் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோன்று கிராம ஊராட்சி பகுதியில் மிகவும் பழுது அடைந்த சாலைகளை புதுப்பிப்பது, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தெய்வசிகாமணி, பழனிசாமி, கீதாலட்சுமி, கலைச்செல்வி, சுப்பிரியா உள்ளிட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...