திருப்பூர் அருகே சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

திருப்பூர் மாவட்டம் அழகுமலை அடுத்த பாளையம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.


 திருப்பூர்: திருப்பூர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக புகார் எழுந்த நிலையில் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அழகுமலை அடுத்த மலைபாளையம் கிராமம் உள்ளது இந்த பகுதியில் பாலசுப்ரமணியம் என்பவர் தோட்டத்தில் கன்று குட்டி மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த நிலையில் திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது பின்னர் அங்கு வேலை செய்யும் வட மாநில தொழிலாளியான விஜய் நேரில் சென்று பார்த்தபோது உடலில் நக காயங்கள் இருந்துள்ளது பின்னர் நாய் கடித்திருக்குமோ என்ற எண்ணத்தில் பெரிதாக எண்ணாமல் மருத்துவருக்கு தகவல் சொல்லிவிட்டு அவர் தோட்டத்து வேளையில் ஈடுபட்டிருந்தார்.

பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கன்று குட்டியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது அப்போது கன்று குட்டிக்கு அருகில் சிறுத்தை இருந்ததைக் கண்ட வட மாநில தொழிலாளி விஜய் கூச்சலிட்டு கொண்டு தோட்டத்தில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் தோட்டத்து உரிமையாளர் உடனே சென்று பார்த்த போது அங்கிருந்து சிறுத்தை அங்கிருந்து மாயமாகிறது பின்னர் அக்கம்பக்கத்தினர் தகவல் அறிந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர் கூடிய நிலையில் வனத்துறையினர் மற்றும் அவிநாசி பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கன்று குட்டியை ஆய்வு செய்து அந்த தோட்டம் முழுவதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்ன ஆய்வு செய்தனர்.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ சாமிநாதன் அப்பகுதியில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த விஜய் இடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுரை கூறி சென்றார் சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...