அதிமுக 52 ஆம் ஆண்டு தொடக்க விழா - கோவையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மரியாதை

அதிமுக கட்சி துவங்கப்பட்டு 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருஉருவ படங்களுக்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான அருண்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: அதிமுகவின் 52ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவையில் கட்சிக்கொடி, பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் இனிப்பு வழங்கினார்.

அதிமுக கட்சி துவங்கப்பட்டு 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருஉருவ படங்களுக்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் அதிமுகவின் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் வாழ்க, அம்மா வாழ்க, எடப்பாடியார் வாழ்க என கோசங்களை எழுப்பினர்.



மேலும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி முன்னிலை வகித்தனர். இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சின்னவேடம்பட்டி சுப்பையன், ஐ.டி.விங் மண்டல இணை செயலாளர் விக்னேஷ், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் துரைசாமி, ஐ.டி விங் மாவட்ட செயலாளர் மணிகண்டன், துடியலூர் பகுதி அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரமோகன், வார்டு செயலாளர்கள் சாந்திபூசன், பந்தல்வீடு கே.பிரகாஷ், சுரேஷ்குமார், சுரேஷ்பாபு, அண்ணா தொழில்சங்க பகுதி செயலாளர் வி.ஆர்.முருகேஷ், இளைஞர் அணி பகுதி செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் ஐ.டி.ஐ ஜெயராஜ், ராஜகோபால், செல்வராஜ், நந்தகோபால், சண்முகம், மோகன்ராஜ், திரு, ரங்கநாதன், சி.டி.சி செல்வம், ராஜூ, விக்னேஷ், சென்னியப்பன், சிவமூர்த்தி, அண்ணாமலை, சர்க்கரையப்பன் மற்றும் சின்னவேடம்பட்டி பகுதி செயலாளர் மாரிசாமி, கவுண்டம்பாளையம் கிழக்கு பகுதி செயலாளர் வக்கில் ராஜேந்திரன் உட்பட 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...