மூலனூர் பகுதிகளில் எண்ணெய் வித்து பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

திருப்பூர் மாவட்டம் மூலனூர் சுற்று ட்டார பகுதியில் உள்ள எண்ணை வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: விவசாயிகள் தரிசு நிலங்களில் எண்ணெய் வித்து பயிர்களான வேம்பு, புங்கன் மற்றும் இலுப்பை நடவு செய்ய மானிய உதவி வழங்கப்படுகிறது.

மூலனூர் சுற்று–வட்டார பகுதியில் உள்ள எண்ணை வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என மூலனூர் வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வேளாண்மைதுறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய எண்ணை வித்து பயிர்கள் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்களில் மரக்கன்று நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட உள்ளது.

விவசாயிகள் தரிசு நிலங்களில் எண்ணெய் வித்து பயிர்களான வேம்பு, புங்கன் மற்றும் இலுப்பை நடவு செய்ய மானிய உதவி வழங்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வேம்பு பயிர்களுக்கு எக்டருக்கு ரூ.17 ஆயிரம் மற்றும் புங்கன் பயிருக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம், இலுப்பை பயிருக்கு எக்டேருக்கு ரூ.15 ஆயிரம் என மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் நடவு செய்தது முதல் மூன்று ஆண்டுகளுக்கு பயிர்கள் மற்றும் பராமரிப்பு மானியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மூலனூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...