கோவையில் ஓவியச்சந்தை - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவிப்பு

தமிழ்நாட்டின் நுண்கலைகளையும், நிகழ்த்துக் கலைகளையும் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வரும் அரசு ஓவியசிற்பக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் அதிகளவில் சந்தை நடத்திட ஆணையிட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: ஓவியச் சந்தையில் தங்களது கலைப்படைப்புகளான ஓவிய மற்றும் சிற்பக் கலைபடைப்புகளின் வண்ண புகைப்படங்கள் (அஞ்சல் அட்டைஅளவில்) மற்றும் தன் விவரகுறிப்புடன் அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் நுண்கலைகளையும், நிகழ்த்துக் கலைகளையும் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வரும் அரசு ஓவியசிற்பக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் அதிகளவில் சந்தை நடத்திட ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் ஓவிய, சிற்பப் படைப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்து அதன் வாயிலாக ஓவிய சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரம் உயர்த்துதல், கலைஞர்களை ஊக்குவித்தல் என்ற அடிப்படையில் கோயம்புத்தூரில் ஓவியச் சந்தை நடத்தப்படவுள்ளது.

இந்த ஓவியச் சந்தையில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த கலைஞர்களின் 500 கலைபடைப்புகளும், பிறமாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் 500 கலைபடைப்புகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், இவ்வோவியச் சந்தையில் கலைப் படைப்புகளை விற்பனை செய்ய ஏதுவாக விற்பனை அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளன.

எனவே ஓவியச் சந்தையில் தங்களது கலைப்படைப்புகளான ஓவிய மற்றும் சிற்பக் கலைபடைப்புகளின் வண்ண புகைப்படங்கள் (அஞ்சல் அட்டைஅளவில்) மற்றும் தன் விவரகுறிப்புடன் உதவி இயக்குநர் மண்டல கலைபண்பாட்டு மையம் அரசு இசைக்கல்லூரி வளாகம் செட்டிப்பாளையம் சாலை, மலுமிச்சம்பட்டி, கோயம்புத்தூர் 641050 முகவரிக்கு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 0422 2610290 அல்லது அலைபேசி எண் 8925357377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...