தாராபுரத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் விளக்கக் கூட்டம்

நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமையில் தாராபுரம் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான விளக்கக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: தூய்மை பணியாளர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் சென்றடையவும், அவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்படவும் உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட உள்ளதாக நகர மன்றத் தலைவர் பாபு கண்ணன் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான விளக்கக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி ஜவகர் நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பாரி ஜான் முன்னிலை வைத்தார்.



தலைவர் பாபு கண்ணன் பேசியதாவது, முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள தனியார் உணவகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனி நபர்களின் இல்லங்கள், ஒலித்தவைகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவான அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் சென்றடையவும் அவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்படவும் உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி ஐயப்பன் ஷாலினி நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...