சிறுமிக்குப் பாலியல் தொல்லை - கட்டட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


திருப்பூர்: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி.

திருப்பூா் மாவட்டம், குண்டடம், பொட்டிக்காம்பாளையத்தைச் சோந்தவா் சுப்பிரமணி. கட்டட மேஸ்திரியான இவரிடம் சித்தாள் வேலைக்கு 35 வயது பெண் ஒருவா் வேலை செய்து வந்தாா். இவா் உடல்நலக்குறைவாக இருந்ததால், அவரது 15 வயது மகளை சுப்பிரமணி சித்தாள் வேலைக்கு கடந்த 2019 செப்டம்பா் 1 ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளாா். ஆனால் வேலைக்கு அழைத்துச்செல்லாமல் சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி வெளியூா் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், தாராபுரம் மகளிா் காவல் துறையினா் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா். சிறுமியை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில், சுப்பிரமணிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.2000 ஆயிரம் அபராமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...