கோவை மாநகராட்சியின் 29ஆவது ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பதவியேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்ட சிவகுரு பிரபாகரன் இன்று பதவியேற்றுக்கொண்டார். மாநகராட்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரைவாக புரிந்து கொண்டு திட்டங்கள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 29-வது ஆணையாளராக இன்று பதவியேற்ற சிவகுரு பிரபாகரன் அவர்களுக்கு ஊழியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.



கோவை மாநகராட்சி ஆணையாளராக இருந்த பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் இணை மேலாண் இயக்குனராக பணி மாறுதல் பெற்றார். இதையடுத்து, கோவை மாநகராட்சியின் புதிய கமிஷனராக சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டார்.



இவர் இன்று பணிப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மேல ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனது கிராமத்திற்கு பல்வேறு வசதிகளை உருவாக்கி தந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் மூன்றாம் இடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவை மாநகராட்சியின் 29-வது கமிஷனராக இன்று பதவியேற்றார். அவருக்கு ஊழியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:



நான் 2018-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜ். சென்னை மாநகராட்சியில் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளேன். அங்கு பாதாளச்சாக்கடை, சாலைகள், மருத்துவம், பள்ளி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டு உள்ளேன். மூன்று வருடங்களாக சிவில் இன்ஜினியராக பணியாற்றிய அனுபவம் உள்ளது. மேலும், வட சென்னையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு உள்ளேன். முதல்வர், அமைச்சர்கள், செயலாளர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து எப்படி பணிகளை திறம்பட செய்வது என கற்றுக்கொண்டேன்.

கோவை மாநகராட்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரைவாக புரிந்து கொண்டு திட்டங்கள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள தன்னார்வலர்கள் நல்ல பணிக்கு பயன்படுத்தப்படுவர். சென்னையில் இருந்ததால் பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளில் எனக்கு நிறைய அனுபவம் உள்ளது. சரியாக கையாளுவேன் என கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...