பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் - கூடலூர் நகராட்சி தலைவர் ஆய்வு

கோவை கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பாடு, கட்டிடங்களின் உறுதித் தன்மை, சுகாதர வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து நகராட்சித் தலைவர் அறிவரசு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: பழுதடைந்த கட்டடங்களில் கல்வி பயின்ற மாணவர்கள் உடனடியாக வேறு அறைக்கு மாற்றப்பட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பாடு, கட்டிடங்களின் உறுதித் தன்மை, சுகாதர வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து நகராட்சித் தலைவர் அறிவரசு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10 அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவை முறையாக செயல்படுகிறதா என்பது குறித்தும், ஆஸ்பெட்டாஸ் சீட் கூரை உள்ள பள்ளிக் கட்டிட்ங்களை கான்கிரீட் கட்டிடங்களாக மாற்ற ஏற்பாடுகள், புதிய வகுப்பறை கட்ட இடம் தேர்வு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.



ஆய்வில் நகராட்சி ஆணையாளர் மனோகரன் தலைமையில் பொறியாளர் ராஜேஷ், திட்டமிடுதல் ஆய்வாளர் பழனிசாமி, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நல்லாசிரியர் கருப்புசாமி, ஹரீட்டா ப்ளோரி, மேலாண்மை குழு பொறுப்பளர் காளியண்ணன், வட்டார ஒருங்கினைப்பாளர் சுமதி, சுகன்யா, ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

ஆய்வில் கலந்துகொண்ட நகராட்சி தலைவர் அறிவரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவிகளிடம் காலை உணவு குறித்து விசாரித்தார். மேலும் செல்வபுரத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் ஒரு வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதை பார்த்து அங்கிருந்த மாணவர்களை வேறு வகுப்புக்கு மாற்றி அந்த அரையை பூட்டிவைத்ததனர்.



உடனடியாக புதிய வகுப்பைறை கட்டவேண்டும் சிமெண்ட் சீட்டில் உள்ள வகுப்பறைகளை கான்கிரீட் கட்டிடமாக மாற்றவும், விறகு அடுப்பு உள்ள சமையல் கூடத்தில் கேஸ் வசதி செய்து கெடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் நகரமன்ற உறுப்பினர்கள் சாந்தாமணி, ரேவதி, ரம்யா, மணிமேகலை, சித்ரா, வனிதாமணி, அகில்சந்திரசேகர், துரை செந்தில்குமார், பேங்க் முருகேசன், ஸ்ரீதர், பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்பழனிசாமி, பிட்டர் வேலாயுதம், காலை உணவு திட்ட பொறுப்பாளர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...