கோவை வெள்ளகிணர் பிரிவு அருகே தண்ணீர் லாரி மீது மோதிய தனியார் பேருந்தால் பரபரப்பு

வெள்ளகிணர்பிரிவு அருகே முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது தனியார் பேருந்து ஒன்று மோதியது. இதில் நிலை தடுமாறிய தண்ணீர் லாரி ஓட்டுநர் சுமார் 50 அடி தூரத்திற்கு முன்னால் சென்று நிறுத்தினார்.


கோவை: தண்ணீர் லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், பேருந்தில் இருந்தவர்கள் நல்வாய்ப்பாக சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார்கள். இதனால் போலீசார் நிம்மதியடைந்தனர்..

கோவை பிரஸ்காலனி பகுதியில் இருந்து 32இ எண் கொண்ட தனியார் பேருந்து ஒன்று கோவையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. துடியலூரை தாண்டி வெள்ளகிணர்பிரிவு அருகே வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. நிலை தடுமாறிய தண்ணீர் லாரி ஓட்டுநர் சுமார் 50 அடி தூரத்திற்கு முன்னால் சென்று நிறுத்தினார்.

அதேவேகத்தில் பேருந்தும் சென்று நின்றது. அப்போது அருகில் வந்த டூவிலருக்கு அடிவிழுந்தது. டூவிலர் ஓட்டியவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.



அதேபோல பேருந்தில் முன்னால் உட்கார்ந்து பயணம் செய்த பயணிகள், பேருந்து ஓட்டுநர் ஆகியோர் சிறிய காயத்துடன் தப்பினர். லாரி ஓட்டுநருக்கும் எதுவும் ஆகவில்லை.



இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த மாநகர போக்குவரத்து துறை போலீசார் தண்ணீர் லாரியை அப்புறப்படுத்தினர். பேருந்தையும் அப்புறப்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஏதுவும் நடக்கவில்லை என்பதால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...