வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி ஐந்து மாணவர்கள் பலி - சுற்றுலா வந்த போது விபரீதம்

கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர் ஆற்றில் குளித்து மகிழ்ந்து விளையாடி செல்கின்றனர். இந்நிலையில் கோவை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிணத்துக்கடவு தனியார் கல்லூரியில் படிக்கும் 10 மாணவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வால்பாறையை சுற்றி பார்க்க வந்துள்ளனர்.

பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு சோலையார் எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள நல்ல காத்து ஆற்றில் குளித்து விளையாடினர். அதில் ஐந்து பேர்கள் தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டிருக்கும் பொழுது ஒருவர் நீரில் சிக்கி உள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற போது ஒருவர் பின் ஒருவராக தண்ணீருக்குள் மூழ்கி உள்ளனர். இதை கரையில் இருந்து பார்த்த ஐந்து நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர்.



அப்பொழுது அவர் வழியாக பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து தீயணைப்பு துறையினர் தண்ணீரில் இறங்கி மூழ்கி உயிரிழந்த சரத், அஜய், ரபேல், தனுஷ், வினித் ஆகிய ஐந்து பேர்களின் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.



சுற்றுலா வந்த இடத்தில் தண்ணீரில் மூழ்கி ஐந்து பேர் இறந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...