தாராபுரம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளை - ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 4-பேர் கைது

தாராபுரம் அருகே கழுத்தில் கத்தியை வைத்து வீட்டின் உரிமையாளரிடம் பணத்தை பறித்து சென்ற நான்கு பேரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: சொந்தமாக ஆம்புலன்ஸ் வாங்குவதற்காக தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சிவசக்தி காலனி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் லிங்கேஸ்வரன் (47). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தாயார் ருக்குமணி. தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பெஸ்ட் நகர் பகுதியில் ருக்குமணி தனியாக வசித்து வருகிறார். ருக்குமணிக்கு கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாததால் திருப்பூரில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார். சிகிச்சைக்காக மகள் வீட்டுக்கு சென்ற நிலையில், மருத்துவ செலவுக்காக பணம் தேவைப்பட்டதால், தாராபுரம் பெஸ்ட் நகரில் உள்ள ருக்குமணி வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்துவர லிங்கேஸ்வரன் அதிகாலை சுமார் 3 மணி அளவில் சென்றுள்ளார்.

அப்போது, ருக்குமணி வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். மேலும் வீட்டிற்குள் திருட முயற்சி செய்வதற்காக தாராபுரம் சங்கர்மில் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான், தாராபுரம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய இருவரும் வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்தனர். வெளியே நின்று கொண்டிருந்த குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி, தினேஷ்குமார் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டிருந்தார். கத்தியினால் கழுத்தை அறுத்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் திருமூர்த்தி மற்றும் ரகுமான், தினேஷ்குமார் ஆகிய மூவரும் லிங்கேஸ்வரனை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

உடனே இச்சம்பவம் குறித்து லிங்கேஸ்வரன், தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.



அங்கு தேடிய போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ரகுமான் (35), அஷ்ரப் (26), திருமூர்த்தி (24), தினேஷ்குமார் (25) ஆகிய 4-பேரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அஷ்ரப் பகலில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராகவும், இரவில் திருடனாகவும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆம்புலன்ஸ் சொந்தமாக வாங்குவதற்காக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.



மேலும் கைது செய்யப்பட்ட 4-பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தாராபுரம் குற்றவியல் நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...