உடுமலை அருகே தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோயிலுக்கு சென்ற ஓருவர் தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர்: நாள் தோறும் கோவிலுக்கு செல்பவரை கொட்டிய தேனீக்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் கடத்தூர் குருவன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் சோலைமுத்து(37).



இவர் கடத்தூரில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் கோவிலுக்கு காலை மாலை செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். வழக்கம் போல் நேற்று மாலை 5.30 மணியளவில், கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கோவில் அருகில் உள்ள மரத்திலிருந்த தேனீக்கள் கூட்டம் கலைந்து, சோலைமுத்துவை கொட்டியுள்ளது. இதில் பதட்டதுடன் கோவிலுக்குள் ஓடிய லைமுத்துவை, அங்கிருந்தவர்கள் மீட்டு, மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.



அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சோலைமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கணியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

உடுமலை அருகே கோவிலுக்கு சென்ற வாலிபர் தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்த சம்பவம் இப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...