சேலத்தில் இருந்து கோவை புறப்பட்ட அரசு பேருந்தில் தீ விபத்து - பயணிகள் அலறல்

சேலத்தில் இருந்து கோவை வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புகைமூட்டத்தால் பயணிகள் அவசர அவசரமாக இறக்கி விடப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


கோவை:சேலத்தில் இருந்து கோவைக்கு வந்த அரசு பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது.

சேலத்தில் இருந்து கிளம்பிய அரசு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த போது கருமத்தம்பட்டி அருகே திடீரென பேருந்தில் முன்பக்கத்தில் புகை கிளம்பிய நிலையில் ஓட்டுநர் சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தி விட்டு பயணிகளையும் இறங்க சொல்லி விட்டு அவரும் நடத்துனரும் இறங்கி உள்ளனர். பின்னர் திடீரென பேருந்தில் தீப்பிடித்தது கொழுந்து விட்டு எரிய துவங்கி உள்ளது.

பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து சூலூரில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து மூலம் கோவைக்கு அனுப்பட்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...