துர்க்கையம்மன் கோவிலில் அன்னதானம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் துர்க்கையம்மன் கோவிலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சாமி தரிசனம் செய்தார்.


திருப்பூர் தாராபுரம் :துர்க்கையம்மன் கோவிலில் அன்னதான நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்வழி பங்கேற்றார்

தாராபுரம் துர்க்கையம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இந்த கோவிலில் அமர்ந்து நெல் மணியில் முதல் எழுத்து எழுதிய பின்பு பள்ளியில் சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் கோவில் பக்தர்கள் சார்பில் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பூஜைக்கு சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பிறகு குழந்தைகளுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் இருக்கும் ஒவ்வொரு தெய்வங்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார். கோவிலுக்கு குடும்பம் குடும்பமாக வந்த பக்தர்களிடம் உரையாடினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...