உடுமலை அரசு மருத்துமனையில் சுகாதார வளாகத்தை மேம்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் உள்ளிட்ட சுகாதார வளாகத்தை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அரசு சுகாதார மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது

திருப்பூர் மாவட்டம் உடுமலை வ.உ.சி. வீதியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்குள்ள சுகாதார வளாகத்தில் முறையான பராமரிப்பு பணி மேற் கொள்வதில்லை. இதனால் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் பெண்கள் சுகாதார வளாகத்தின் கதவுகள் சேதமடைந்து திறந்த வெளியாக உள்ளது. இதன் காரணமாக இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து நிர்வாகத்திடம் பொதுமக்கள் தரப்பில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடுமலை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை மேம்படுத்துவதுடன் சேதமடைந்த கதவுகளை சீரமைக்க முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...