உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேலப்பநாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சர்தார் வேலப்ப நாயக்கருக்கு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குருவப்ப நாயக்கனூரைச் சேர்ந்தவர் சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேலப்பநாயக்கர். இவர் 1942 ல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார். இதன் காரணமாக ஒரு வருடம் வேலூர் சிறையிலும், இரண்டு ஆண்டுகள் அலிபரி சிறையிலும் சிறை தண்டனை அனுபவித்தார்.

அதைத் தொடர்ந்து நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 1949 ம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ம் தேதி காலமானார். அவரது தியாகம் மற்றும் நினைவை போற்றும் வகையில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சர்தார் வேலப்ப நாயக்கருக்கு உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது. குருவப்பநாயக்கனூர், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பிலும் சர்தார் வேலப்பநாயக்கர் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.



அந்த வகையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.



நிகழ்வுக்கு உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழுதுணைத் தலைவர் சண்முகவடிவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் தி. செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜனார்த்தனன் துவக்க உரையாற்றினார். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முத்துக்குமார், அபிராமி செந்தில்குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...