கோவை மாநகராட்சியில் செயல்படும் அரசு மாணவர் நல விடுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாநகராட்சி பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் நல விடுதியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதிகள், ஆதிதிராவிடர் மாணவர்களின் நல விடுதிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி கோவை மாநகராட்சி பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் உண்டு பரிசோதித்தார்.



மேலும் அங்கு தங்கியுள்ள மாணவர்களிடமும் அங்குள்ள வசதிகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை உடன் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் நல விடுதியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன் உடன் இருந்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...