தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

வாகனம் ஓட்டும்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி தாராபுரத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்துறையினர் சார்பில், தலைகவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல்துறை சார்பில், தலைகவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.



இந்த விழிப்புணர்வு பேரணியை தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.



இந்த விழிப்புணர்வு பேரணி பொள்ளாச்சி சாலையில் துவங்கி பூக்கடை கார்னர், பழைய நகராட்சி அலுவலகம், பெரியார் சிலை உள்ளிட்ட தாராபுரத்தில் உள்ள முக்கிய சாலைகள் வழியா இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



வாகனம் ஓட்டும்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துன்டு அறிக்கைகளை வாகன ஓட்டிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.‌

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் இருவர் கலந்து கொண்டு சாலை விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை கவிதைகளாக கூறி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இந்நிகழ்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜனி, துணை ஆய்வாளர்கள் மற்றும் தாராபுரம், அலங்கியம்,குன்டடம், மூலனூர் உள்ளிட்ட காவல் நிலையத்தை சார்ந்த காவலர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...