தரமின்றி சாலை அமைத்த மூவருக்கு மெமோ

800 மீட்டர் நீளத்துக்கு, ரூ.1.10 கோடியில் புதிதாக ரோடு போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. தரமின்றி சாலை அமைத்தற்காக மாநகராட்சி அதிகாரிகள் மூவருக்கு ‘மெமோ' வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் தரமின்றி சாலை அமைத்தற்காக மாநகராட்சி அதிகாரிகள் மூவருக்கு ‘மெமோ' வழங்கப்பட்டது.

பழைய ரோட்டை தோண்டி எடுக்காமல், லேசாக 'மில்லிங்' செய்து விட்டு, தார் ரோடு போடப்பட்டது. இத்தகவல், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு சென்றது.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி அளவில், அப்பகுதிக்கு நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார்.

புதிதாக போடப்படும் ரோட்டின் நீளம், அகலம், தார் கலவை வெப்ப அளவு உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினார். ஒரு மணி நேரம் அங்கேயே இருந்து, தரமாக ரோடு எப்படி போடுவது என்பது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

நேற்று காலை, 8:00 மணிக்கு அதே பகுதிக்கு கமிஷனர் மீண்டும் சென்று ஆய்வு செய்தார்.

ஜல்லிக்கற்கள் மீது ரோலர் இயக்கி, 'காம்பேக்ட்' செய்யாமல் இருந்தது. ஆங்காங்கேகற்கள் பெயர்ந்து கிடந் தன.அவர் சொல்லிக் கொடுத்தது போல், தார் ரோடு போடாததால், கோபமடைந்த கமிஷனர், ஒப்பந்த நிறுவனமான, 'விஷ்ணு இன்ப்ரா' நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

இப்பணியை கள ஆய்வு செய்து, தரத்தை உறுதி செய்யாத குற்றத்துக்காக, உதவி பொறியாளர் பர்மான் அலி, உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகரன், நிர்வாக பொறியாளர் கருப்பசாமி ஆகியோருக்கு 'மெமோ' கொடுக்க, கமிஷனர் உத்தரவிட்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...