உடுமலையில் நகர பாஜக சார்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாஜக சார்பில் ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: பாஜக சார்பில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை விழாவில் அனைவருக்கும் பூஜையை பொங்கல், பொறி, சுண்டல் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாஜக சார்பில் ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட சரஸ்வதி மற்றும் கடவுள்களின் திருவுருவப்படங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. நகர பாஜக மகளிர் அணி சார்பில் சரஸ்வதி பாடல்கள் பாடப்பட்டன.



திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, முன்னாள் நகர பாஜக தலைவர்கள் ராஜேந்திரன், மன்மதராஜ், நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவசங்கர், நமோ ஸ்ரீனிவாசன், மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட நிர்வாகிகள் நடராஜ் ஐயப்பன் உட்பட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



பின்னர், அனைவருக்கும் ஆயுத பூஜையை முன்னிட்டு பொங்கல், பொறி, சுண்டல் வழங்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...