அண்ணாமலைக்கு பேனர் வைக்க மறுப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்கு

சூலூரில் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது அண்ணாமலைக்காக வைக்கப்பட்ட பேனருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் மீது பொது மக்களுக்கு இடையூறு செய்வது அனுமதி இன்றி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அண்ணாமலை வருகைக்காக கருமத்தம்பட்டி பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்த பேனர்களை பொது இடங்களில் வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.



இதன் காரணமாக நான்கு ரோட்டில் பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



மேலும் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் மீது பொது மக்களுக்கு இடையூறு செய்வது அனுமதி இன்றி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கருமத்தம்பட்டி டிஎஸ்பி தையல்நாயகி உத்தரவின் பேரில் ஆய்வாளர் அன்னம் வழக்கு பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர்கள் மூவரையும் நேரில் விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள கண்டித்து பாஜகவினர் சமூக வலைதளங்கள் கண்டன பதிவை பதிவிட்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...