உடுமலை நகராட்சி 4-வது வார்டில் உள்ள பொது கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் உயிரிழப்பு

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு யூ.எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


திருப்பூர்: பொதுக்கிணற்றில் மீன்கள் உயிரிழந்துள்ளது பற்றி சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறையினர் கிணற்றில் ஏதேனும் கலக்கப்பட்டதா விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு யூ.எஸ்.எஸ்.காலனி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை வீரன் கோவில் அருகில் உள்ள பொதுக் கிணற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வரும் நிலையில் இன்று கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகின்றது.

பின்னர் கிணற்றை பார்த்த பொழுது 100க்கும் மேற்பட்ட மீன்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மிதப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறையினர் கிணற்றில் ஏதேனும் கலக்கப்பட்டதா எனவும் மீன்கள் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.

மாசடைந்த கிணற்று நீரை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பொதுக் கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் உயிரிழந்த சம்பவம் இப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...