திருப்பூர்- ஜார்கண்ட் இடையே தினசரி ரயில் - ஆளுநர் உறுதி

திருப்பூரில் நடந்த வட மாநில தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் திருப்பூர்- ஜார்கண்ட் தினசரி ரயில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்று வர ஏதுவாக திருப்பூர்- ஜார்கண்ட இடையே ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் - பெருமாநல்லூர், கே.எம் நிட்வேர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.



அதில் தொழில், தொழிலாளர் நலன் என்பது நாணயத்தின் இரு பக்கம் போன்றது எனவும், வட மாநில தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலங்களை விட தமிழகத்தில் பாதுகாப்பாகவும், மகிழ்வாகவும் பணி புரியக் கூடிய சூழல் உள்ளதாகவும், குறிப்பாக இங்கு பணி புரியக் கூடிய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது வீடுகளில் உள்ளது போன்ற எண்ணத்துடன் பணியாற்றி வருவதாகவும், திருப்பூரிலிருந்து, ஜார்கண்ட் மாநிலத்திற்கு வாரம் ஒருமுறை மட்டுமே ரயில் வந்து செல்கிறது. தினமும் வந்து செல்லும்படியான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் பேசினார்.



தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றி அங்கேயே படித்து இளநிலை பட்டம் பெற்ற 17 பெண்களுக்கு பட்டங்களை ஆளுநர் வழங்கினார்.



அதனை ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். தொடர்ந்து ஏற்றுமதி நிறுவனத்திற்கு சென்ற ஆளுநர் வட மாநிலத்தவர்கள் அங்கு பணி புரிவதை பார்வையிட்டு, அவர்களிடம் கலந்துரையாடினார். நிகழ்வின் போது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம், டாலர் அப்பரேல்ஸ் நிறுவன உரிமையாளர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...