சாலைமறியல் போராட்டத்தில் அதிமுக திமுகவினர் மோதல்

உடுமலை அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் அதிமுக திமுகவினர் மோதலால் கைகலப்பு ஏற்பட்டு மண்டை உடைக்கப்பட்டது.


திருப்பூர்: குடிநீர் கேட்டு நடந்த சாலைமறியல் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சங்கராம நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.



இந்த நிலையில் நேற்று இரவு அதிமுக மற்றும் பொதுமக்கள் உடுமலை சாலையில் அரசு பேருந்துகளை சிறை பிடித்து காலி குடங்களுடன் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்பொழுது திமுகவை சேர்ந்த சங்கராம பேரூராட்சி தலைவர் மல்லிகாவின் கணவர் கருப்புசாமி பேச்சுவார்த்தைக்கு வந்த பொழுது அதிமுக திமுக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது இதில் திமுகவில் பேரூர் கழக இளைரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன் என்பவருக்கு மண்டை உடைந்தது.

அதிமுகவில் எம்ஜிஆர் இளைரணி செயலாளர் சந்தோஷ் கௌதம் மற்றும் மகேஸ்வரன் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். திமுகவைச் பிரகதீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் அதிமுகவினர். சந்தோஷ் கௌதம் கருப்புசாமி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உடுமலை அருகே குடிநீர் கேட்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் அதிமுக திமுகவினர் மோதிக்கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...