உடுமலை அருகே நடைபெற்ற பொன்னர் சங்கர் திருக்கல்யாணம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மெட்ராத்தியில் அருள்மிகு பொன்னர் சங்கர் திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் நடந்த பொன்னர் சங்கர் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

உடுமலை அருகே மெட்ராத்தி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் பொன்னர் சங்கர் கதைப்பாடல் தொடர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பெரியகாண்டி அம்மன் தவசு, செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம், தாமரை அரியநாச்சியின் பூப்பு நன்னீராட்டு விழா, குன்னுடையாசாமி தாமரை அரியநாச்சி கல்யாணம், செல்லாண்டி அம்மன் தேரோட்டம், தாமரை தவசு, பொன்னர் சங்கர் அருக்காணி தங்கம் பிறப்பு ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வந்தது.



இதனைத் தொடர்ந்து அருள்மிகு பொன்னர் சங்கர் திருக்கல்யாணம் நடைபெற்றது.



முன்னதாக ஐம்பொன்னால் ஆகிய பொன்னர், சங்கர், ஸ்ரீபச்சாயி, ஸ்ரீபவளாயி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து கணபதி பூஜை, செல்லாண்டியம்மன் பூஜை மற்றும் சிறப்பு ஹோமத்துடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.



திருக்கல்யாணத்தை தொடர்ந்து பொன்னர் சங்கருக்கு கிரீடம், செங்கோல் சாத்தப்பட்டு பட்டாபிஷேக விழாவும் நடந்தது.



இந்நிகழ்ச்சியை உடுமலை முனைவர் க. சீதாராமன், உடுமலை சிவா ஆகியோர் கதைப்பாடல் வழி நடத்தினர் நிகழ்ச்சியில் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...