ஒரே நேரத்தில் 108 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு - சீர்வரிசையாக ஊட்டச்சத்து பொருட்கள்

கோவையில் ஏழை எளியகர்ப்பிணி தாய்மார்கள் 108 பேருக்கு ஒரே நேரத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.


கோவை: எளிய கர்ப்பிணி பெண்களின் கனவை நனவாக்கும் வகையில் 108 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.



கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அலையன்ஸ் கிளப், பசுமை நிழல் அறக்கட்டளைகள் மற்றும் தமிழ்செல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய கர்ப்பிணி தாய்மார்கள் 108 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



பாரம்பரிய முறைப்படி கர்ப்பிணி தாய்மார்களுக்கு 6 வகையான அறுசுவை உணவுடன் கண்ணாடி வளையல்கள், வளைகாப்பு சீதனங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு மஞ்சள் பூசி சடங்குகள் செய்யப்பட்டன.

இதுகுறித்து வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணித்தாய்சௌமியா ஸ்ரீ கூறும்போது,



சாதி பேதம் இன்றி கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தியது வரவேற்கத்தக்கது. இதுபோல் கோவையில் எங்கும் நடைபெற்றது இல்லை. வீட்டில்நடைபெறுவது போல சடங்குகள் செய்யப்பட்டு சீதனங்கள் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

இது குறித்து பசுமை நிழல் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகி விஜயகுமார் பேசும் போது,



வளைகாப்பு நடத்த முடியாமல் இருக்கும் ஏழை எளிய கர்ப்பிணி பெண்களின் கனவை நனவாக்கும் வகையில் 108 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களுடன், தாய் வீட்டு சீதனம் பசுமை நிழல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...