தமிழக அரசின் மருத்துவத்துறை சார்பில் வட்டார சுகாதார சபைக் கூட்டம் - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார சுகாதார சபைக் கூட்டம் கோவை துடியலூரை அடுத்த பழனிக்கவுண்டன்புதூரில் நடைபெற்றது.


கோவை: மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதார சேவைகளின் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து வட்டார சுகாதார சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



கோவை துடியலூர் அடுத்துள்ள பழனிகவுண்டன்புதூரில் உள்ள தங்கமணி திருமண மண்டபத்தில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார சுகாதார சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் தாளியூர் வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர் ஞானசேகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். சுகாதார பணிகள் உதவி திட்ட மேலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சிவலிங்கம் சிறப்புரையாற்றினார்.



இக்கூட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய சேர்மன் நர்மதா துரைசாமி, கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு, குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் டி.ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு பேசினர்.



இந்த கூட்டத்தில் தமிழக மக்களின் சுகாதார தரத்தினை மேம்படுத்துதல், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திற்குட்பட்ட பொது மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், ஆரம்ப நிலை, 2ம் நிலை மற்றும் 3ம் நிலை வசதிகளுக்கான தர மதிப்பெண்களை அதிகரித்தல், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகளின் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், விபத்து, காயம் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துதல், மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதார சேவைகளின் பயன்பாட்டை அதிகரித்தல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு கருத்துகள் பதிவு செய்து சுகாதார துறை துணை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.



இந்த கூட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திற்குட்பட்ட குருடம்பாளையம், பன்னிமடை, நஞ்சுண்டபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம், தடாகம், அசோகபுரம் உள்ளிட்ட ஊராட்சிகள், கூடலூர் நகராட்சி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட 3 பேரூராட்சிகள் சார்பில் மன்ற தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், வட்டார கல்வி துறை, வாட்டார ஊட்டச்சத்து துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த அலுவலர்கள் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் ராமராஜ், பாஞ்சாலி, பாலு உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...