பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும் - மேட்டுப்பாளையத்தில் சமூக நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பஞ்சமி நிலத்தினை மீட்க கோரியும், பஞ்சமி நில விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க கோரியும், சமூக நீதி கட்சி சார்பில், மேட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சமூக நீதி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சமூக நீதி கட்சி மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். பஞ்சமி நிலங்களை மீட்டிட தனி ஆணையம் அமைக்க வேண்டும். காரமடை குட்டையூரில் உள்ள, 60 ஏக்கர் பஞ்சமி நில விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பஞ்சமி நில வாரிசுதாரர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை, வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...