உடுமலையில் முறைகேடாக மது விற்பனை 4 பேர் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை

திருப்பூர் மாவாட்டம் உடுமலையில் முறைகேடாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 281 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


திருப்பூர்: முறைகேடாக மது விற்பனை செய்தவர்களை தனிப்படை அமைத்து திருப்பூர் காவல்துறை கைது செய்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சில்லறை மது விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் உடுமலை உட்கோட்ட காவல் சரக பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உடுமலையைச் சேர்ந்த முஸ்தபா(54), மடத்துக்குளம் தாலுக்கா கணியூரை சேர்ந்த முகமது ஷேக்(32), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர்(35), மதுரை மாவட்டத்தை சேர்ந்த பார்த்தசாரதி(38) ஆகியோர் சில்லறை மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து உடுமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 281 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...