லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் - உடுமலையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்திற்கு அர்ப்பணிப்போம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை மகத்துவம் மையம் உள்ளது. மத்திய விஜிலென்ஸ் கமிஷனின் உத்தரவு படி லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் முதல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை இந்த மையத்தில் டைபிடிக்கபடுகிறது.

இந்த நிலையில் தொடக்க நிகழ்வுக்கு மேலாளர் ரகோத்துமன் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து அவர் உறுதிமொழியை வாசிக்க அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்தனர். அப்போது 2023ம் ஆண்டிற்கான லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துருவான ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்திற்கு அர்ப்பணிப்போம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...