தீபாவளி போனஸ் கேட்டு கோவையில் எஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

கோவையில் ஓய்வூதியம் மற்றும் தீபாவளி போனஸ் வேண்டி தமிழ்நாடு எஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.


கோவை: கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரிய கூட்ட முடிவுப்படி 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் ஆக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கட்டட தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.



தமிழ்நாடு எஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஓய்வூதியம் மற்றும் தீபாவளி போனஸ் வேண்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது.



இந்தப் போராட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரிய கூட்ட முடிவுப்படி 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.



மாநிலம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தமிழ்நாடு எஐடியுசி அமைப்பினர் கோவை பழைய தபால் நிலையத்தில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் மேற்கொண்டனர்.



முன்னதாக அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...