நமது குப்பை, நமது பொறுப்பு, குப்பைகளை தரம்பிரித்து வழங்குமாறு பொதுமக்களுக்கு கோவை மாநகராட்சி அறிவுரை

கோவை‌ மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில்‌ உள்ள வணிக நிறுவனங்கள்‌, கடைகள்‌ மற்றும்‌ நடைபாதை கடைகள்‌ நடத்தும்‌ வியாபாரிகள்‌ தங்கள்‌ கடைகளில்‌ சேகரமாகும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க தவறும்‌ பட்சத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன்படி தினந்தோறும்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌ என்று மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ எச்சரித்துள்ளார்.

கோவை‌ மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில்‌ உள்ள வணிக நிறுவனங்கள்‌, கடைகள்‌ மற்றும்‌ நடைபாதை கடைகள்‌ நடத்தும்‌ வியாபாரிகள்‌ தங்கள்‌ கடைகளில்‌ சேகரமாகும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து மக்கும்‌ குப்பைகளை பச்சைநிற குப்பைத்‌ தொட்டிகளிலும்‌,‌ மக்காத குப்பைகளை நீல நிற குப்பைத்‌ தொட்டிகளிலும்‌ சேகரித்து மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்களிடம்‌ கொடுக்க வேண்டும்‌.

பச்சை மற்றும்‌ நீல நிற குப்பைத்‌ தொட்டிகளை 30.11.2023 தேதிக்கு முன்பாக கடைகள்‌/ நிறுவனங்களில்‌ முறையாக வைத்து பொதுமக்களுக்கும்‌ வாடிக்கையாளர்களுக்கும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்‌. கோவை‌ மாநகரை தூய்மையாக பராமரிக்க தங்களின்‌ பங்களிப்பை முக மலர்ச்சியுடன்‌ செய்து தர கேட்டுக்‌ கொள்ளப்படுகிறீர்கள்‌. தவறும்‌ பட்சத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன்படி தினந்தோறும்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌ என்று அறிவுறுத்தப்படுகின்றார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...