கோவையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நிலம் மோசடி - மூன்று பேருக்கு சிறை தண்டனை

நண்பர் வெங்கடேசன் என்பவருக்கு கடன் கொடுக்க பணம் இல்லாததால், கோவை, கணபதியை சேர்ந்த செந்தில்நாதன் என்பவர், தனக்கு சொந்தமான அன்னூரில் உள்ள 1.52 ஏக்கர் நிலத்தை, 2020ம் ஆண்டு அடமானம் வைத்து பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.


கோவை: போலி பத்திரம் மூலம் நிலத்தை ஆள்மாறட்டம் செய்து விற்பனை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை, கணபதியை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவருக்கு அன்னூரில், 1.52 ஏக்கர் நிலம் உள்ளது. 2020ம் ஆண்டு செந்தில்நாதனின் நண்பர் வெங்கடேசன் அவரிடம் பணம் கேட்டார். பணம் இல்லாத காரணத்தால், தனது அன்னூர் நிலத்தை அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்ள, செந்தில்நாதன் அறிவுறுத்தினார். வெங்கடேசன், செந்தில்நாதனின் இடப்பத்திரத்தை பெற்று கலைச்செல்வன் என்பவரிடம் அடமானம் வைத்தார்.

இந்நிலையில், அந்த இடத்தை ஆள்மாறாட்டம் செய்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்தது செந்தில்நாதனுக்கு தெரிந்தது. இதனையடுத்து அவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். தனிப்படையினர் விசாரணையில், சென்னையை சேர்ந்த ஜோதி மற்றும் ஜாகீர்உசைன் ஆகியோர் பாலசுப்ரமணியன் என்பவரை, செந்தில்நாதன் என கூறி, போலி அடையாள அட்டை தயாரித்து ஆள்மாறாட்டம் செய்தது தெரிந்தது.

இவர்களுடன் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் 49, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரத்தினசாமி61 ஆகியோர் இணைந்து நிலத்தை ஜெயச்சந்திரன் என்பவருக்கு விற்பனை செய்தது தெரிந்தது.

இதையடுத்து, தனிப்படையினர் நந்தகுமார், ரத்தினசாமி மற்றும் துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் 41, ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். 1.52 ஏக்கர் நிலப்பத்திரத்தை பறிமுதல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க, தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...