மூலனூர் சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.67-க்கு விற்பனை - வரத்து குறைவே காரணம் என விவசாயிகள் விளக்கம்

மழை பெய்துள்ளதாலும், வரத்து குறைவு காரணமாகவும், மூலனூர் சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.67க்கு விற்பனையானது. கடந்த நான்கு நாட்களாக இதே நிலை நீடிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: மூலனூர் சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைவாக இருந்தாலும் கடந்த நான்கு நாட்களாக ஒரே விலை நீடித்து வருகிறது.

மூலனூர் வாரசந்தை பேரூராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த சந்தையில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் இந்த சந்தைக்கு கொண்டு வருவது வழக்கம். இதை வாங்க மூலனூர் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள கிளாங்குண்டல், போளரை, நத்தபாளையம், கன்னிவாடி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாங்கிச்செல்வது வழக்கம்.

இந்த சந்தையில் மூலனூருக்கு பெயர்பெற்ற முருங்கைக்காய் தற்போது மழை பெய்துள்ளதால் வரத்து குறைவால் விலை உயர்ந்து தற்போது ஒரு கிலோ ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மர முருங்கை ரூ.45-க்கும், செடி முருங்கை ரூ.53-க்கும், கரும்பு ரூ.57-க்கும் விற்பனை ஆனது. முருங்கைக்காய் வரத்து குறைவாக உள்ளதால் கடந்த 4 நாட்களாக இதே இதே விலை நீடித்து வருகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...