மணக்கடவு பகுதியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - காவல்துறை விசாரணை

அலங்கியம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மணக்கடவு பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகன் சரவணன், தனது காதலி தற்கொலை செய்து கொண்டதை தாங்கமுடியாமல், அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மணக்கடவு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சரவணன் (வயது20). இவர் முத்தூர் அருகே உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த தாராபுரம் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி சரவணனின் காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்தநிலையில் காதலனான சரவணன் காதலி தற்கொலை செய்த நாள்முதல் காதலியை நினைத்து மனம் உடைந்த நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்தார். இது குறித்து பெற்றோர் பலமுறை சரவணனிடம் கேட்டும் ஒன்றும் இல்லை என சரவணன் பதில் கூறி வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தந்தையிடம் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். சரவணன் காலையில் வெகு நேரமாகியும் எழுந்திருக்காமல் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த தந்தை பெரியசாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சரவணன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சரவணனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சரவணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து அலங்கியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...