உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பிரிவு உபச்சார விழா - காவலர்கள் பாராட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்துக் காவல் ஆய்வாளராக பணியாற்றிய வெங்கடேசன் அவர்களின் பிரிவு உபச்சார விழா நகராட்சி தேஜஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் எங்கு ஏற்பட்டாலும் உடனே சம்பவ இடத்திற்கு சென்று காவல் ஆய்வாளர் சீரமைக்கும் பணியில் ஈடுபடுவார் என பிரிவு உபச்சார விழாவில் காவலர்கள் பாராட்டி பேசினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்துக் காவல் ஆய்வாளராக பணியாற்றிய வெங்கடேசன் அவர்களின் பிரிவு உபச்சார விழா நகராட்சி தேஜஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் உடுமலை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன், கோவை திருப்பூரில் உடன் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் உடுமலை ஊர்க்காவல் படையினர் மற்றும் உடுமலை உட்கோட்டத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு காவலர்கள் மற்றும் தலைமை காவலர்கள் மற்றும் உடுமலை பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து காவல் ஆய்வாளரை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், அரசியல் கட்சி தலைவர்கள் வரும் பொழுது எந்த வித பாகுபாடு இல்லாமல் அனைத்து காவலர்களுடன் ஒருங்கிணைந்து போக்குவரத்தை திறம்பட சீர்படுத்தினார். போக்குவரத்து நெரிசல் உடுமலை பகுதியில் எங்கு ஏற்பட்டாலும் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபடுவார் என பல்வேறு தரப்பினர் மேடையில் பாராட்டி பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...