ஊராட்சியில் ரூ.30 லட்சம் மோசடி - தொட்டம்பட்டி கிராம சபை கூட்டத்தில் பாமகவினர் வாக்குவாதம்

கடந்த 2019-20ஆம் ஆண்டு நிதியாண்டில் 30 லட்சம் மதிப்பில் மெகா மோசடி நடந்துள்ளதாக கூறி, பாமக குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், தொட்டம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


திருப்பூர்: தொட்டம்பட்டி ஊராட்சியில் ரூ.30 லட்சம் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் தொட்டம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது கடந்த 2019- 20ஆம் ஆண்டு நிதியாண்டில் 30 லட்சம் மதிப்பில் மெகா மோசடி நடந்துள்ளது. இதை பாமக குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறிந்து இன்றைய கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



அப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் நாங்கள் தலைவராக இருக்கும் காலத்தில் தவறு நடைப்பெற வில்லை என தெரிவித்தனர். மேலும் தொட்டம்பட்டி ஊராட்சியில் ரூ.30 லட்சம் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், இனிவரும் காலங்களில் மோசடிகள் நடைபெற்றால் பாமக சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். குடிமங்கலம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார் பொதுக் குழு உறுப்பினர் சுவாமிநாதன், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை செயலாளர் மகேந்திரவர்மன், கொள்கை பரப்பு செயலாளர் முருகவேல் கனகராஜ் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...