தொட்ட துறைகள் அனைத்திலும் உச்சம் தொட்டவர் - கோவையில் கலைஞருக்கு அமைச்சர் சாமிநாதன் கோவையில் புகழாரம்

கோவை வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு இதழாளர்-கலைஞர் சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கை விழாக்குழு தலைவர் அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.


கோவை: தொட்ட துறைகள் அனைத்திலும் உச்சம் தொட்டவர் கலைஞர் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.



கோவை வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு இதழாளர்-கலைஞர் சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கை விழாக்குழு தலைவர் அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.



அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,



முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் இதழாளராக எவ்வாறு பணியை மேற்கொண்டார் ஜனநாயக்கத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகைத்துறை தர்மத்தை எவ்வாறு காப்பாற்றினார். மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய சிறந்த பத்திரிகையாளராக பணியாற்றியது உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டவர் கலைஞர். ஒரு மாதம் நடத்தப்படும் இக்கண்காட்சி தற்போது 14 நாட்கள் நிறைவடைந்துள்ளது. கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்ளை சேர்ந்த மக்களும் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். நவம்பர் 21-ம் தேதி அவிநாசி சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கு நடத்த திட்மிடப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவ,மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்குதல். அகவை முதிர்ந்த தமிழரிஞர்களுக்கு பேருந்தில் இலவச பயணம் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

வணிக வளாகம், அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்திலும் தமிழில் பெயர் இருக்க வேண்டும். இது குறித்த ஆய்வுக்கூட்டம் ஓரிறு நாட்களில் நடத்தப்படும். போலி பத்திரிகைகளை ஒழிக்க பத்திரிகைத்துறையை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...