உடுமலை வட்டாரப் போக்குவரத்துறை சார்பில் பேருந்து நிலையத்தில் ஆய்வு

உடுமலையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் வைத்திருந்த பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டார போக்குவரத்து துறை சார்பில் பேருந்து நிலையங்களில் உள்ள பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி உடுமலை பகுதியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பஸ்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிக சத்தம் தரக்கூடிய ஏர்ஹாரன் மற்றும் அலங்கார விளக்குகள் குறித்த சிறப்பு சோதனை 30 பஸ்களில் செய்யப்பட்டது.

இதில் 10 பஸ்களில் ஏர்ஹாரன் குறைபாடு கண்டறியப்பட்டு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. மேலும் ரூபாய் 27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையானது தொடர்ந்து செய்யப்படும் என்று உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...