வால்பாறை கிருஸ்துவ ஆலயங்களில் கல்லறை திருநாள் அனுசரிப்பு - திருப்பலியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

கிருஸ்துவ ஆலயங்களில் இன்று கல்லறை திரு நாள் அனுசரிக்கப்படுகிறது. அவர்களது குடும்பத்தில் இறந்து போன உற்றார் உறவினர்களை நினைக்கும் விதமாக இன்றைய தினம் கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. வால்பாறை மலை பகுதி உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது


கோவை: நாடு முழுவதும் உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் இன்று கல்லறை திரு நாள் அனுசரிக்கப்படுகிறது. அவர்களது குடும்பத்தில் இறந்து போன உற்றார் உறவினர்களை நினைக்கும் விதமாக இன்றைய தினம் கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது.



கோவை மாவட்டம் வால்பாறை மலை பகுதி உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.



வால்பாறை நகர் பகுதியில் உள்ள திரு இருதய ஆலயம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ள நூற்று கணக்காணவர்களின் கல்லறைகள் அனைத்தும் வர்ணம் பூசி மலர்களால் அலங்கரித்து மெலுகுவர்த்தி ஏந்தி பிரத்தனைகள் நடைபெற்றது, வால்பாறை திரு இருதய ஆலயம் பங்கு தந்தை அருட் திரு ஜெகன் ஆன்டனி தலைமையில் கல்லறை தோட்டத்தில் உள்ள பீடத்தில் மரித்தோர்களுக்கான விசேஷ திருப்பலி நடைபெற்றது.



இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.



இதை போல வால்பாறை புனித லூக்கா ஆலயம் பங்கு தந்தை தலைமையில் விசேஷ பிரதனைகள் நடத்தப்பட்டது.



மேலும் வால்பாறை சி எஸ் ஐ ஆலயத்திலும், முடிஸ் புனித அந்தோனியார் ஆலயத்திலும் ரொட்டிக்கடை வனத்து சின்னப்பர் ஆலயத்திலும், சோலையார் அணைப்பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும் கல்லறை திரு நாள் அனுசரிக்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...