திருப்பூர் மாவட்டத்தில் ஓராண்டில் 111 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - 13 பேர் மீது வழக்குப்பதிவு

ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது பெண்களுக்கு எதிரான மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த இலவச தொடர்பு எண்ணையும் தெரியப்படுத்த வேண்டும் என திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் கடந்த ஓராண்டு மட்டும் 111 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.



திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் சமூக நலத்துறை, தோழமை அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்புகளின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து

ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில் மூத்த பத்திரிகையாளர் மணி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் போது ஊடகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் குழந்தைகளுக்கான எதிரான குற்றங்கள் நடைபெறும் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் குழந்தை குற்றங்களை தடுக்க வேண்டிய நிகழ்வுகள் குறித்து ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி, திருப்பூர் மாவட்டத்தில் கடந்து ஓர் ஆண்டில் மட்டும் 111 குழந்தை திருமணங்கள் குற்றம் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் இதில் 90-க்கும் மேற்பட்ட திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதோடு 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் ஆறு வழக்குகளுக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஊடகங்கள் இது குறித்த செய்திகளை வெளியிடும்போது பெண்களுக்கு எதிரான மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த இலவச தொடர்பு எண்ணையும் தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...