உடுமலையில் கல்லறை திருநாள் - சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்பு

கல்லறை நாளையொட்டி முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர் தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி குடும்பத்துடன் வழிபாடு நடத்தினர்.


திருப்பூர்: உடுமலையில் கல்லறை திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆத்மாக்களின் திருநாள் என்று அழைக்கப்படும் கல்லறை திருநாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட 3- வது நாள் உயிர்த்து எழுந்தார்.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்கள் மற்றும் உறவினர்கள் ஆத்மா சாந்தி பெற அவர்கள் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கு அதிகாலையில் சென்று சுத்தம் செய்து மலர் தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வழிபடுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது.



அந்த வகையில் உடுமலை கபூர் கான் வீதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடுமலை தென்னிந்திய திருச்சபைகளின் சார்பில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களது முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர் தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி குடும்பத்துடன் வழிபாடு நடத்தினர். அப்போது இமானுவேல் ஆலயத்தைச் சேர்ந்த ஆயர் அம்மா மேரி செல்வராணி, லூத்தர் ஆயர், கிறிஸ்துநாதர் ஆலயத்தைச் சேர்ந்த ஆயர் செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்பு ஜெபம் செய்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...