கவுண்டச்சிபுதூர் பெஸ்ட்நகரில் கான்கிரீட் சாலை - ரூ.10 லட்சத்தில் அமைக்க பூமி பூஜை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் கவுண்டச்சிபுதூரில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார கழிவறையும் திறந்து வைக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் ஒன்றியம் கவுண்டச்சிபுதூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் 3-வது பெஸ்ட் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.செல்விரமேஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஈ.சசிக்குமார், 3-வது வார்டு உறுப்பினர் நர்மதா ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் ரூ.10 லடசத்தில் சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார கழிவறையை திறந்து வைத்து ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கூறுகையில் “இப்பகுதியில் அதிகமாக மக்கள் வசிக்கும் பகுதியில் பெண்கள் காலை கடனை முடிக்க பெரும் உதவியாக இருக்கும். இதனை மக்கள் தினசரி பயன்படுத்திய பின்பு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும்” என்றார். அப்போது பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் பெரியசாமி செய்திருந்தார்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...