கோயம்புத்தூரில் வடகிழக்கு பருவமழை - கட்டுப்பாட்டறை தொலைபேசி எண்ணை அறிவித்த மாநகராட்சி

பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை புகார்கள் தொடர்புடைய புகைப்படங்களை புகார்களாக மாநகராட்சியின் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பலாம் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமான புகார்களுக்கு, பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என ஆணையர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆங்காங்கு ஏற்படும் மழைநீர் தேக்கங்கள் இடையூறுகள், கழிவுநீர் அகற்றுதல், மின்விளக்கு பழுதுகள், சாலைகள் பாதிப்பு, மரங்கள் உடைந்து விழுவது ஆகிய புகார்களை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரமும் பருவமழைக்கான அவசர கால் கட்டுப்பாட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறை மூலம் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன எனவே, பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை புகார்கள் தொடர்புடைய புகைப்படங்களை புகார்களாக மாநகராட்சியின் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.

மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2302323, மத்திய மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-4709525, கிழக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2577216, மேற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2551700, வடக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2243133, தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2252705, மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை வாட்ஸப் கைபேசி எண்-8190000200. பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்கள்

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...